‘கொடி’ படத்துக்குப் பிறகு அரசியல் பிரமுகர் கதாபாத்திரத்தில் தனுஷ்? 

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ‘கொடி’ படத்தில் அரசியல் பிரமுகராக நடித்திருந்தார்.

நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தை முடித்துவிட்டார். இதில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ் குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அடுத்து, தனது 50 படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். தலைப்பிடப்படாத இப்படம் ‘டி51’ என அழைக்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் என படக்குழு அறிவித்திருந்தது. தனுஷுடன் இணைந்து நாகர்ஜுனா நடிக்கிறார் என அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில், இப்படம் பொலிட்டிக்கல் த்ரில்லர் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது எனவும், இதில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.hindutamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *