ஹைதராபாத்: பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்’ படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமவுலி வாங்கியுள்ளார். படக்குழுவிடமிருந்து அவர் டிக்கெட்டை பெறும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம், ‘சலார்’. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா ரெட்டி, ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இரண்டு நண்பர்களைப் பற்றிய கதையை கொண்ட இந்தப் படம், 22-ம் தேதி வெளியாக இருக்கிறது. தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கி உள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ‘சலார்’ படத்தின் முதல் டிக்கெட்டை ‘பாகுபலி’, ‘ஆர்ஆர்ஆர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராஜமவுலி வாங்கியுள்ளார். தயாரிப்பாளர் நவீன் எர்னேனி மற்றும் படக்குழுவிடம் இருந்து ராஜமவுலி டிக்கெட்டை பெற்றுக்கொண்டார். இந்த புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.
THE PRIDE OF INDIAN CINEMA @ssrajamouli buys the first ticket of INDIA’S BIGGEST ACTION FILM #Salaar in Nizam from the team and producer #NaveenYerneni
Nizam Release by @MythriOfficial
Bookings open very soon in a grand manner with some Massive Celebrations … pic.twitter.com/d75n500YwS
— Mythri Movie Makers (@MythriOfficial) December 16, 2023