
தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. அதில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அப்பணியில் ஒரு இடம் மட்டும் காலியாக உள்ளது. அண்ணா யுனிவர்சிட்டி இந்த வேலை அறிவிப்பிற்கான முழு விவரங்களையும் annauniv.edu இல் வெளியிட்டுள்ளது. கால அவகாசம் குறைவாக உள்ளதால் விண்ணப்பதாரர்கள் உடனே ஆப்லைனில் விண்ணப்பித்து பயன்பெறவும்.
ALSO READ : மத்திய அரசு வேலையில் 9000 பணியிடங்கள் சீக்கிரம் அப்ளை பண்ணிடுங்க
பணியின் பெயர் : Research Assistant என்ற பணியிடம் காலியாக உள்ளது.
கல்வித்தகுதி : அண்ணா பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/B.Tech, ME/M.Tech, MCA பட்டம் பெற்றவர்களால் மட்டும் விண்ணப்பிக்க முடியும்.
பணியிடம் : இந்த பதவிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை செய்யலாம்.
விண்ணப்பக்கட்டணம் : அண்ணா யுனிவர்சிட்டி வேலைக்கு அப்ளை பண்ண கட்டணம் இல்லை.
சம்பளம் : ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு செலக்ட் ஆகும் நபர் மாத சம்பளம் ரூ.21, 000 பெற்றுக்கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை : அண்ணா பல்கலைக்கழகம் பணியாளர்களை Written Test/Interview அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறது.
விண்ணப்பிக்கும் தேதிகள் : விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 26,2024 தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அணைத்து ஆவணங்களையும் இணைத்து Dr.S.Bama, Associate Professor & Principal Investigator, Department of Information Science and Technology, College of Engineering Guindy, Anna University, Chennai-600025 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை பெற வேண்டுமென்றால் Official Notification pdf ஓப்பன் செய்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in