இந்த நிலையில் தான் அசோக்குமாரின் செயல்பாட்டால் அதிருப்திக்குள்ளான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மருமகன் அசோக்குமாருக்குப் பதில் தனது மகனின் மனைவிக்கு எம்.பி. சீட்டு கேட்கும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் தனித்து நின்றால் தோல்வி அடைவது உறுதி என்பதால், எம்.பி.சீட்டை மனதில் வைத்து அ.தி.மு.க.-வுக்கு அசோக்குமார் தாவிட்டார்” என்கின்றனர் விவரம் அறிந்த ஈரோடு மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள்.


இதுதொடர்பாக அசோக்குமார் நம்மிடம் பேசுகையில், “தொடக்கத்தில் இருந்தே ஆற்றல் அறக்கட்டளை மூலம் மக்களுக்கான சேவையை செய்து வருகிறேன். எனது பயணத்தில் அ.தி.மு.க-வில் இணைந்தால் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும் எனத் தோன்றியது. மற்றபடி எம்.பி. சீட்டை குறிவைத்து அ.தி.மு.க.-வில் இணையவில்லை. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் எனக்கு எந்த மனத்தாங்கலும் இல்லை.
கட்சியில் பதவி வேண்டும் என்ற எண்ணத்தில் பா.ஜ.க.வில் இணையவில்லை. எனக்கு பிளக்ஸ் அரசியல் செய்யத் தெரியாது. அ.தி.மு.க.-வுடன் கூட்டணியில் இருந்த வரை நலத்திட்ட நிகழ்ச்சிகள் எந்த பிரச்னையும் இன்றி நடைபெற்றது. கூட்டணி முறிவுக்குப் பின், பாஜக நிர்வாகி என்ற ரீதியில்தான் என்னை அணுகுகின்றனர். இதனால், பல இடங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே அ.தி.மு.க.-வில் இணைந்துள்ளேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com