
பட மூலாதாரம், X/K.ANNAMALAI
தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் தளத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக அமைச்சர் அளித்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் தேசியக் கொடி இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது.
இந்தப் படம் இடம்பெற்றது எப்படி? தவறு நடந்தது எங்கே? விளம்பரம் அளித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
நாளிதழ் விளம்பரத்தில் சீனக் கொடியால் சர்ச்சை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது. இதனை வாழ்த்தி மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக உள்ள அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் இன்றைய நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் சில ராக்கெட்களின் படங்களும் இடம்பெற்றிருந்தன. அதில் பிரதானமாக இடம்பெற்றிருந்த ராக்கெட்டில் சீனாவின் கொடி இடம்பெற்றிருந்தன. அருகில் இருந்த மற்றொரு ராக்கெட்டில் சீன எழுத்துகள் இடம்பெற்றிருந்தன.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட பா.ஜ.க., தி.மு.க. மீது கடுமையாக தாக்குதல் தொடுத்தது. இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திரமோதி, “திமுகவின் இன்றைய விளம்பரம் நகைப்புக்குரியதாக உள்ளது. அவர்கள் இந்திய அறிவியலையும், இந்திய விண்வெளித் துறையையும் அவமதித்துள்ளனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 1
இதற்குப் பிறகு பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ட்விட்டர் பதிவு ஒன்றில் இது தொடர்பாக தி.மு.கவை கடுமையாக விமர்சித்திருந்தார். “அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று தமிழ் நாளிதழ்களில் அளித்துள்ள விளம்பரம் சீனாவுக்கு அவர்கள் விசுவாசமாக இருப்பதையும் நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலுமாக புறந்தள்ளியிருப்பதையும் காட்டியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 2
கனிமொழி கூறியது என்ன?
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தி.மு.கவின் தூத்துக்குடி தொகுதி எம்.பி. கனிமொழி, “யாரோ ஆர்ட் ஒர்க் செய்தவர்கள் இந்தப் படத்தை போட்டிருக்கிறார்கள். சீனப் பிரதமர் இங்கே வருகிறார். அவரை பிரதமர் வரவேற்று மகாபலிபுரத்தில் வாக்கிங் சென்றார்கள். அதை எதிரி நாடு என யாரும் அறிவிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் Twitter வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Twitter குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Twitter பதிவின் முடிவு, 3
அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரத்தில் தவறு நடந்தது எங்கே?
சர்ச்சைக்குள்ளான இந்த விளம்பரம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்புச் செய்யப்பட்டு, பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டது.
எப்படி இந்தத் தவறு நேர்ந்தது என்பது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொலைபேசியிலும் நேரிலும் தொடர்புகொண்டு, இது தொடர்பாக கேட்டபோது, அவர்கள் விளக்கம் அளிக்க முன்வரவில்லை.
அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் கேட்ட போது பதிலளித்த அவரது உதவியாளர், “அந்த விவகாரம்தான் முடிந்துவிட்டதே. அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது.. அந்த விவகாரம் முடிந்துவிட்டது. சீனாவை எதிரி நாடு என்று யாரும் அறிவிக்கவில்லையே” என்று மட்டும் பதிலளித்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்