அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான சட்டத்தில், உறவினர்கள் மட்டுமே உறுப்புகளை தானம் செய்ய முடியும் எனக் கூறப்படாத நிலையில், பல உயிர்களைக் காப்பாற்றிய டாக்டர் இன்று தனது உயிரைப் பாதுகாக்க முடியாத நிலையில் போராடி வருகிறார்” என வேதனை தெரிவித்தார். மேலும், “உறவினர்கள் அல்லாதவர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய விதிகளில் வழிவகை செய்யப்பட்டு, அவை நடைமுறையில் உள்ளபோதும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மறுப்பது சட்டவிரோதம்!” என கண்டித்தார்.
அதைத் தொடர்ந்து, “மனுதாரர் காஜா மொய்னுதீனும், அவருக்கு சிறுநீரகம் நன்கொடையளிக்க முன்வந்திருப்பவரும் (ராமாயி) ஒருவாரத்தில் மருத்துவக் குழு முன்பாக ஆஜராக வேண்டும். அவர்களிடம் சிறுநீரக நன்கொடை குறித்து கோயம்புத்தூர் தாசில்தாரர் உரிய விசாரணை மேற்கொண்டு, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட விதிகளின்கீழ் அதற்கான அங்கீகார குழுவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கைமீது அங்கீகாரக் குழு, நான்கு வாரங்களில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்!” எனக் கேட்டுக்கொண்ட நீதிபதி, “போதிய சட்ட விழிப்புணர்வு இல்லாததால், உறவினர் அல்லாதவர் உறுப்பு தானம் அளிக்க முன்வரும்போது, மருத்துவமனை நிர்வாகங்கள் அறுவை சிகிச்சை செய்ய தயக்கம் காட்டுகின்றன. இது மனிதாபிமானமற்ற செயல். எனவே, இது குறித்து மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தமிழ்நாடு அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்!” என உத்தரவிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com