

மேடையின் முன்பு வைத்தும், வெளியே இழுத்துச்சென்றும் அடித்து உதைத்துள்ளனர். ‘நான் சி.பி.எம் நிர்வாகி’ என அவர் கத்தியும் விடாமல் தரையில் போட்டு மிதித்துள்ளனர். இதனால் மூச்சுவிட சிரமப்பட்ட ரயீஸை மீட்ட அவரின் உறவினர்கள், கடவந்தறையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். சொந்தக் கட்சியினரே தன்னை தாக்கியதால் மன வேதனையடைந்த ரயீஸ், சி.பி.எம் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கோஷம் எழுப்பிய இரண்டு பேரையும் தாக்கும்போது ரயீஸுக்கு ஒரு போன் வந்துள்ளது. அவர் போனை எடுத்து பேசியுள்ளார். அதைப் பார்த்தவர்கள், அவரும் போராட்டக்காரர்களுடன் வந்தவர் என நினைத்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்துவதாக சி.பி.எம் மாவட்டச் செயலாளர் மோகனன் தெரிவித்துள்ளர்.
நன்றி
Publisher: www.vikatan.com