“பசியில தவிக்கிற மக்களைப் பார்த்து கண்ணீர் முட்டுது" –

கீதம் ரெஸ்டாரென்ட் ஓனர் எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கார். அவர்கிட்டயும், பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர்கிட்டயும் உதவி கேட்டேன். அவங்களும் உடனே உதவினாங்க. நேத்து நைட் 800 பேர் சாப்பிடுற மாதிரி பார்சல் சப்பாத்தி வாங்கினோம். தெரிஞ்ச பசங்க படகு இருக்குனு சொல்லவே, நானே நேர்ல போனேன். படகுல நான் உட்கார்ந்துக்க, வாலன்டியரா வந்த பசங்க மொபைல் டார்ச் லைட் வெளிச்சத்துல எங்கிட்ட இருந்து ஃபுட் பார்சலை மக்களுக்குக் கொடுத்தாங்க. இந்த சின்ன முயற்சியால சிலரின் பசியைப் போக்க முடிஞ்சது. இன்னிக்கு சிலருக்கு பால் பாக்கெட் கொடுத்தோம்.

டான்ஸ் மாஸ்டர் கலாடான்ஸ் மாஸ்டர் கலா

டான்ஸ் மாஸ்டர் கலா

‘பசிக்குது… ஏதாச்சும் சாப்பிட கொடுங்க’னு மக்கள் தவிப்போடு சொன்னப்போ கண்ணீர் முட்டிடுச்சு. சோஷியல் மீடியா மூலமா இதைத் தெரிஞ்சுக்கிட்டு பலரும் எங்களோடு உதவி செய்ய முன்வந்திருக்காங்க. அரசாங்கம் பரபரப்பா வேலை செஞ்சாலும், இன்னும் உதவிகள் சென்றடையாத மக்கள் எக்கச்சக்கமா இருக்காங்க. வெளிச்சமில்லாம, குடிநீர் மற்றும் உணவு இல்லாம, கொசுக்கடியில தூக்கமில்லாம பலரும் தவிக்கிறாங்க. அரசாங்கத்தோட உதவிகள் முழுமூச்சா கிடைக்கிற வரைக்கும், நம்மால முடிஞ்ச உதவிகளை செஞ்சு பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுவோம்” என்று அக்கறையுடன் சொல்கிறார் கலா.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *