நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது… எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டெல்லியிலிருந்து காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழ்நாட்டின் காங்கிரஸ் பொறுப்பாளர் அஜய்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


தி.மு.க சார்பில் எம்.பி டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, திருச்சி சிவா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.ஆர்.பாலு, “தொகுதி பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. எல்லா கட்சிகளும் அதிகமான இடங்களில் போட்டியிட வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். நாங்களும் 40 தொகுதிகளிலும் தி.மு.க நிற்க வேண்டும் என்றுதான் விரும்புவோம்.
நன்றி
Publisher: www.vikatan.com