நாடு முழுவதும் ஆயுஷ்மான் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசு சார்பில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மத்திய அரசு அட்டைதாரர்களுக்கு ஆயுஷ்மான் பரிசு திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அதாவது, தற்போது வரை பொதுமக்கள் ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருட்களை மட்டுமே பெற்று வந்தனர்.
இந்நிலையில், தற்போது ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு இந்த புதிய திட்டத்தை செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கிய நிலையில், காந்தி ஜெயந்தி அக்டோபர் இரண்டாம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 கோடி மக்கள் பயன் அடைந்துள்ள நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதிக்குள் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சுகாதார வசதிகளும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com