அடுத்தக்கட்டமாக விசாரணை அறிக்கையையும், அமைச்சரின் விளக்கத்தை வைத்து மீண்டும் ஆய்வுக்குட்படுத்தி குற்றபத்திரிகை தாக்கல் செய்யும் வேலைகளை அதிகாரிகள் விரைவில் தொடங்கலாம். இன்னும் ஓரிரு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாலும் ஆச்சரியத்துக்கு இல்லை” என்றனர்.
நம்மிடம் பேசிய அமைச்சர் பொன்முடியின் ஆதரவாளர்கள் சிலரோ, “2012-ம் ஆண்டு அரசியல் காழ்புணர்ச்சியுடன் அ.தி.மு.க தொடர்ந்த வழக்கு. அமைச்சர்மீது களங்கம் விளைவிக்க வேண்டுமென்றே அரசு அதிகாரிகளை வைத்து திட்டமிட்டே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்துவது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. தி.மு.க அரசு எதையும் சட்டரீதியாக எதிர்கொள்ளும்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com