தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவை `பலியாடு’ ஆக்கினாரா ஆளுநர்

புழுகுனி ஆளுநர் நாடகம் ஆடுகிறார்!

இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா, “மாநில அரசால் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதமாதப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் செயல்பாடுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக விசாரணையில், “காலவரையறையின்றி மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது” என்று கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம் ‘நெருப்போடு விளையாடாதீர்கள்’ என்று ஆளுநருக்கு கடந்த நவம்பர் 10-ம் தேதி கொட்டு வைத்தது. மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தார்மீக அடிப்படையில் அவர் அமைச்சராக தொடர்க்கூடாது என்று முடிவு எடுக்கிறீர்கள். ஆனால், இதில் காட்டிய ஆர்வத்தை ஏன் முன்னாள் அமைச்சர்கள் மீது ஏன் காட்டவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

தமிழன் பிரசன்னாதமிழன் பிரசன்னா

தமிழன் பிரசன்னா

தன்னோடு நிலைமை மோசமாவதை தெரிந்து கொண்ட ஆளுநர், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 20-ம் தேதி வருவதற்குள், ‘அவசர அவசரமாக 10 மசோதாக்களை திருப்பியனுப்பிதோடு, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் மீதான விசாரணைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து இருக்கிறார். இது இரு அப்பட்டமான ஓரங்க நாடகம். அதுவும் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

6.7.2023 அன்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், `எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் கடிதம் எதுவும் வரவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதிலில், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கான ஒப்புதல் கடிதம் 15.5.2023 அன்றே வந்ததாக ஆளுநர் மாளிகை குறிப்பிட்டு இருக்கிறது. இதன்மூலம் ஆளுநர் ரவி ஒரு புழுகுனி என்பது அப்பட்டமாக தெரிகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான அறிக்கைஎம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான அறிக்கை

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான அறிக்கை

அரசியல் சாசனத்தின் பாதுகாவலராக ஆளுநர் இருக்கவேண்டுமென்றுதான் அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக கூறியிருக்கிறார். ஆனால், பா.ஜ.க, தான் ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது. ஆளுநர்களும் அரசியல் சாசனத்தை படுகொலை செய்வதோடு, மக்கள் சாசனமாக திகழும் சட்டமன்றத்தை அவமதிப்பு செய்கிறார்கள். இந்த வழக்கை பொறுத்தவரை விசாரணை ஆளுநருக்கு எதிராக மிக கடுமையாக இருக்கிறது. இதை உணர்ந்துதான் தற்போது நாடகம் ஆடுகிறார் ஆளுநர்.” என்றார் கொதிப்புடன்.

அமைச்சர் வீரமணிஅமைச்சர் வீரமணி

அமைச்சர் வீரமணி

எம்.ஆர்.விஜயபாஸ்கர்எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

ஆளுநர் ரவி தன்னை காப்பாற்றிக் கொள்ள முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா-வுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிரான வழக்கு உச்சமடையும்போது, முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வீரமணிக்கும் சிக்கல் ஏற்படும் என்கிறார்கள் விவரமறிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *