யாத்திரையின்போது, என் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்திய பல அனுபவங்கள் இருக்கின்றன. தொலைதூர கிராமங்களிலிருந்து, தெரியாத மக்கள் பலர், தேரைப் பார்த்ததும் உணர்ச்சிப் பெருக்குடன் என்னிடம் வந்து, ராம் என்று கோஷமிட்டுவிட்டுச் சென்று விடுவார்கள். அதன் செய்தியென்னவென்றால், ராமர் கோயில் என்பது பலரின் கனவு. பின்னர், அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ராமர் தன்னுடைய பக்தரான மோடியைத் தேர்ந்தெடுத்தார்.


திறப்பு விழா அன்று, கோயிலில் ராமர் சிலையைப் பிரதமர் மோடி பிரதிஷ்டை செய்யும்போது, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்துவார். இருப்பினும், இந்தத் தருணத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லாதது வருத்தமளிக்கிறது. அரசியலிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி என்னுடைய வாழ்வின் ஒரு அங்கமாக அவர் இருந்தார்” என்று அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
நன்றி
Publisher: www.vikatan.com