மதுரை: கர்ப்பிணிகள் மரணம்; ஆவணங்கள் திருத்த சர்ச்சை;

இந்த நிலையில், “கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது தவறு. நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டம் நடத்துவோம்” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருக்கின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்க மாநிலத் தலைவர் செந்தில், “மதுரை அரசு மருத்துவமனையில் வண்டியூரைச் சேர்ந்த கர்ப்பிணி அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 29-ம் தேதி சிகிச்சைக்குப் பிறகு மரணமடைந்தார். ஆனால் நகர்நல அலுவலர் வினோத், கூட்டமாக மகப்பேறு வார்டுக்குள் வந்து மருத்துவப் பதிவேடுகளைப் பார்த்திருக்கிறார். அது தவறான செயல். பிரசவத்தின்போது ஒருவர் இறந்துவிட்டால், அது குறித்து விசாரணை நடத்த தணிக்கை குழு இருக்கிறது. அவர்களிடம்தான் அவர் முறையிட வேண்டும். அதைவிடுத்து மருத்துவப் பதிவேடுகளில் அரசு மருத்துவர்கள் திருத்தம் செய்திருக்கின்றனர் என்று குற்றம்சாட்டியிருக்கிறார். அப்படியெல்லாம் திருத்தவில்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்பதால், பயிற்சி மருத்துவர்கள் தவறுதலாக எழுதியதை திருத்தம் செய்திருக்கலாம். இது சாதாரண விஷயம்.

அரசு மருத்துவர் சங்கத்தினரின் செய்தியாளர் சந்திப்புஅரசு மருத்துவர் சங்கத்தினரின் செய்தியாளர் சந்திப்பு

அரசு மருத்துவர் சங்கத்தினரின் செய்தியாளர் சந்திப்பு

இந்த நிலையில், அவர் சொன்ன புகாரை வைத்து கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதைக் கண்டிக்கிறோம். நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதை வலியுறுத்தி கோரிக்கை அட்டைகளை அணிந்து, குடும்ப நல அவசர சிகிச்சைகள் உட்பட அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளை நிறுத்துவது எனவும், தங்கள் கோரிக்கை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும், அரசு மருத்துவர் சங்கத்தில் தீர்மானம் இயற்றியிருக்கின்றனர்.

“ஆண்டுக்கு இரு முறை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களில் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆய்வுசெய்து, அது குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி அதிகமாக மரணங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத்துறை இயக்குநரகத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அதனால்தான், இந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் மாற்றிப் மாற்றி புகார் தெரிவித்துக் கொள்கின்றன” என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *