காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான என்கவுன்ட்டர் மோதலில் உயிரிழந்த மகனுக்காக கதறி அழுத ராணுவ அதிகாரியின் தாயை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும் கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்திய சம்பவம், கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே புதன், வியாழன் என இரண்டு நாள்களாக துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.


அதில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ கேப்டன் ஷுபம் குப்தாவும் ஒருவர். இதனையறிந்து, ஷுபம் குப்தாவுக்கு இரங்கல் தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ரூ.50 லட்சம் இழப்பீடு தருவதாகவும், ஷுபம் குப்தாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாகவும் அறிவித்தார். இந்த நிலையில், ஆக்ராவிலிருக்கும் ஷுபம் குப்தா வீட்டுக்கு நேற்று சென்ற உத்தரப்பிரதேசத்தின் பா.ஜ.க அமைச்சரும், எம்.எல்.ஏ-வும், கதறி அழுதுகொண்டிருந்த ஷுபம் குப்தாவின் தாயை கேமரா முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுக்க கட்டாயப்படுத்தியிருக்கின்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com