வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் வள்ளலார் சிலையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டார்.


அப்போது உரையாற்றிய மோடி, “கல்வியின் வலிமையை வள்ளலார் நம்பினார். ஒரு வழிகாட்டியாக அவரின் கதவுகள் எப்போதும் திறந்தே இருந்தன. அதன் மூலம், எண்ணற்ற மக்களுக்கு வழிகாட்டினார். சமூக சீர்திருத்தத்தில் வள்ளலார் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றிய அவருடைய பார்வை, சாதி, மதம், சமயம் ஆகியவற்றைக் கடந்தது. அவரின், படைப்புகளும் எளிதாகப் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியவையே.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com