பாஜக மகளிரணி நிர்வாகிமீது தாக்குதல் – அமர் பிரசாத் ரெட்டி

இந்தப் புகாரின்பேரில் போலீஸார், பா.ஜ.க மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் கார் டிரைவரான சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர், நிவேதா, கஸ்தூரி உள்ளிட்டோர்மீது மொத்தம் 9 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சைதாப்பேட்டை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவர் ஸ்ரீதர் கைதுசெய்யப்பட்டார். மற்றவர்களை போலீஸார் தேடிவருகிறார்கள்.

இது குறித்துப் பேசிய கோட்டூர்புரம் போலீஸார், “தேவி என்பவர் கொடுத்த புகாரின்பேரில், பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, அவரின் டிரைவரும் சைதை கிழக்கு மண்டல பா.ஜ.க துணைத் தலைவருமான ஸ்ரீதரன், சைதை கிழக்கு மண்டல மகளிரணியின் தலைவி நிவேதா, சைதை கிழக்கு மண்டல மகளிர் சிறுபான்மை அணி துணைத் தலைவி கஸ்தூரி மற்றும் அடையாளம் தெரியாத மூன்று பேர்மீது ஐ.பி.சி பிரிவுகள் 147, 452, 323, 324 ,354, 427, 109 & 506(i) IPC r/w 4 of TNPHW Act-ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, ஸ்ரீதரனைக் கைதுசெய்திருக்கிறோம்.

அமர் பிரசாத் ரெட்டிஅமர் பிரசாத் ரெட்டி

அமர் பிரசாத் ரெட்டி

பா.ஜ.க-வின் உட்கட்சி விவகாரம் தொடர்பாக இந்த தகராறு நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்தச் சம்பவத்தில் அமர் பிரசாத் ரெட்டியின் பெயரைச் சொல்லி தாக்குதல் நடத்தப்பட்டதாக தேவி புகாரளித்ததால்தான் அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவுசெய்திருக்கிறோம்” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *