இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி அணு ஆயுதம் ஏந்தி உலகில் எந்த மூலைக்கும் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய புதிய ஏவுகணையான புரேவெஸ்ட்னிக்கை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டதாக ரஷ்ய அதிபர் அறிவித்தாா். அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் அணு ஆயுத சோதனைகள் தடை ஒப்பந்தத்துக்கான சட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கான மசோதா ரஷ்ய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ரஷ்ய நாடாளுமன்றமும் இறுதி ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில், ஒரு மாபெரும் அணு ஆயுத சோதனை நிகழ்த்தியதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.


இது குறித்து வெளியான தகவலில், “கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணை ரஷ்யாவின் தூரக் கிழக்கில் உள்ள சோதனை தளத்திலிருந்தும், மற்றொரு அணு ஆயுத ஏவுகணை பேரண்ட்ஸ் கடலில் உள்ள அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலிலிருந்தும் ஏவப்பட்டுச் சோதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் எதிரி நாடுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கிறது” எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தச் சோதனை உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒத்திகை எனக் கூறப்பட்ட நிலையில், `உக்ரைனைத் தாக்குவதற்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று அமெரிக்க மறுத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com