தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் தனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்து தெரிவித்த – டிடிவி தினகரன்!!

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியது:

” மக்கள் அனைவருக்கும் தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாட எனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்தினை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். அதோடு தீபாவளி பண்டிகை ஆனது நாட்டு மக்களை பெரும் துன்பத்திற்கு உள்ளாகிய நரகாசூரன் என்ற அரக்கனை திருமால் அழித்த நாள் அன்று அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

மேலும் அதர்மம் எப்பொழுதும் நிலைத்தது இல்லை என்பதை உணர்த்தி, தீமைகள் எனும் இருளை விலக்கி, நன்மை எனும் வெளிச்சத்தை பரப்பும் இந்த இனிய தீபாவளி திருநாளில் எல்லா மக்களும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து அன்பு தழைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறினார்.

ALSO READ : ஐஸ்லாந்தில் 14 மணி நேரத்தில் ஏற்பட்ட 800 நிலநடுக்கம்..! அச்சத்தில் மக்கள்!!

அதோடு மக்களின் மனதில் ஏற்படும் சாதி, மத பாகுபாடுகளை கடந்து அனைத்து மக்களின் மனதிலும் ஒற்றுமை உணர்வை ஏற்றும் ஒளியாக இந்த தீபாவளி திருநாள் அமைய மீண்டும் ஒருமுறை தீபாவளி திருநாளை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி உள்ளார்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Previous articleமாணவர்களுக்கு விரைவில் இலவச லேப்டாப் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *