தமிழ்நாட்டின் ஆளுநர் ஃபாத்திமா பீவி!
1992 ஏப்ரல் 29-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதிவிலிருந்து ஓய்வுபெற்ற ஃபாத்திமா பீவி, அதன்பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும், கேரள மாநில பிற்படுத்தப்பட்ட மக்கள்நல வாரியத்தின் உறுப்பினராகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அதைத்தொடர்ந்து, 1995-ம் ஆண்டு குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் (ஜனவரி 25), அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தமிழ்நாட்டின் ஆளுநராக ஃபாத்திமா பீவியை நியமனம் செய்தார்.
இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் என்று வரலாற்றில் தன் பெயரை பதித்தார். 2001-ல் அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னால் தாமாக முன்வந்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த ஃபாத்திமா பீவி, தன்னுடைய பதவிக் காலத்தில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதிக்கு ஜெயலலிதா ஆகிய இருவரையும் கண்டார்.
நன்றி
Publisher: www.vikatan.com