இந்த ஐ.டி.சோதனை குறித்து விவரமறிந்த சிலரிடம் பேசினோம், “முதற்கட்டமாக வரி ஏய்ப்பு புகார் தொடர்பாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. தற்போது ஐ.டி.சோதனை நடைபெறும் இடங்கள் அனைத்துமே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள்தான். இந்த சோதனைக்கும் முன்பு நடைபெற்ற மணல் தொடர்பான சோதனைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முன்பு மணல் குவாரிகளில் நடந்த சோதனையில் சிக்கிய ஒருசில ஆவணங்கள் சில கட்டுமான நிறுவனங்களின் பெயர்களும் அடிபட்டது கவனிக்கத்தக்கது.
இந்த சோதனையில் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டிய மற்றொரு விஷயம், சி.எம்.கே கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடத்தில் நீண்டுகொண்டே போகும் சோதனையைத்தான்.
இந்த நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சியிலும் சரி பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து பணிசெய்து வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தைக் கட்டியதும் இந்த நிறுவனம்தான். மேலும், இந்த நிறுவனம் பல்வேறு துணை நிறுவனங்களை நடத்திவருகிவதாகவும், இந்த நிறுவனம் தனது வருமானத்தைக் குறைத்துக் காட்டியதாகவும் ஐ.டி.துறை அதிகாரிகள் சிலர் சொல்கிறார்கள். சோதனை இன்னும் நீளும் வாய்ப்பு இருக்கிறது. சோதனை நிறைவடைந்த பிறகு கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் குறித்த முழு விவரம் தெரியவரும்” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com