"திமுக-வை திட்ட அண்ணாமலை போல் 1000 மலைகள் உள்ளன;

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழ்நாட்டை சார்ந்தவர். வேற மாநில ஆளுநராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பை பார்க்க வருவது பாராட்டுக்குரியது. அதேநேரம், அவர் பார்வையிட்டுவிட்டு ஆளுநராக தான் பதில் கூற வேண்டுமே தவிர அரசியல்வாதியாக பதில் கூறக்கூடாது. பாஜக-காரரை போல் தமிழிசை சௌந்தர்ராஜன் செயல்பட கூடாது. விமர்சனம் செய்ய பா.ஜ.க-வில் அண்ணாமலை போன்ற பல மலைகள் உள்ளன. இவர் வந்து தான் கூடுதலாக தி.மு.க-வை திட்ட வேண்டுமா?.

பொன்முடி போல் சொத்து குவிப்பு வழக்கில் பலர் தண்டனை பெற்றுள்ளனர். பொன்முடி தான் முதலில் சிறை போகிறாரா?. முதலமைச்சர்கள், அமைச்சர்களே சிறை போய் இருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மட்டும் இல்லை, அதிகாரிகள் யாராக இருந்தாலும் இ.டி, சி.பி.ஐ, ஐ.டி போன்றவற்றின் சோதனைகள் உள்நோக்கத்துடனும் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்க கூடாது. கட்சியை அழிக்கும் நோக்கிலோ, அதன் புகழை கெடுக்கும் வகையிலோ இருக்க கூடாது. அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இருக்க கூடாது. எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை என்று கூறும் போதும், பா.ஜ.க-வினரை பார்த்து, ‘உங்களுக்கு கோபம் வரவில்லையா, அவர்களுடன் கூட்டணி இல்லை என்று ஏன் அறிவிக்கவில்லை’ என்று பா.ஜ.க-வினரை தான் கேட்க வேண்டும். பா.ஜ.க-வை விட்டு அ.தி.மு.க வெளியே வந்துள்ளதால் பா.ஜ.க-வை மட்டும் முழுமையாக திட்டினால் அவர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தால் தற்போது காங்கிரஸையும் பேச வேண்டும் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி, ‘தேசிய கட்சிகளால் எந்த பலனும் இல்லை’ என்று கூறுகிறார்.

பேட்டியளிக்கும் திருநாவுக்கரசர்பேட்டியளிக்கும் திருநாவுக்கரசர்

பேட்டியளிக்கும் திருநாவுக்கரசர்
தே.தீட்ஷித்

இன்னும் போக போக அவர் பா.ஜ.க-வையும் கடுமையாக விமர்சனம் செய்வார்.

எங்கள் கூட்டணி கூட்டத்தில் 26 தலைவர்கள் கலந்துகொண்டார்கள். எம்.பி-கள் கூடிதான் யார் பிரதமர் என்று தேர்ந்தெடுப்போம். ராகுல் காந்தி வந்தால் கார்கே ஒத்துகொள்வார். கார்கே வந்தால் ராகுல் காந்தி ஒத்துக்ககொள்ளவார். என்னுடைய முதல் சாய்ஸ் ராகுல் காந்தி தான். வேங்கைவயல் சம்பந்தமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சி.பி.ஐ-க்கு போகவேண்டிய வழக்கா என அரசு முடிவு செய்யும். ராமர் கோயிலில் கும்பிடுபவர்கள் போய் கும்பிடட்டும். முடியாதவர்கள் இங்கே இருந்து கும்பிடுவோம். நான் அனைத்து கடவுளையும் கும்பிடுபவன். கோயில் கட்டியாகிவிட்டது. பிடித்தவர்கள் அனைவரும் கும்பிடலாம். ராமரை கும்பிட கூடாது என்று இல்லை. பிடித்தவர்கள் கும்பிடலாம். ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களுக்கு கஷ்டமான நேரத்தில் உதவி செய்ய வந்தார்களா, இல்லை குறை கூற வந்தார்களா?. நிவரணப் பணி முடிந்த பின் பொறுமையாக அவர் வந்து கணக்கு கேட்கட்டும். அமைச்சர் உதயநிதி ஒரு கட்சியில் பொறுப்பில் இருக்கிறார். அவருக்கு இதை தான் பேச வேண்டும் என்று யாரும் சட்டம் போடகூடாது. அதற்கு பா.ஜ.க பதில் கூறி விட்டார்கள். யாரும் யாருக்கும் பள்ளிக்கூடம் நடத்த முடியாது” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… 

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… 

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *