இந்நிலையில் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாகை போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், “பாதுகாப்பு பணியில் ஈடுப்படிருந்த ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் பா.ஜ.கவில் சேர்வதற்காக அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு சென்று விசாரித்து மிஸ்டுகால் கொடுத்துள்ளனர்.


இதை ஒருவர் வீடியோ எடுப்பதை கவனித்த ராஜேந்திரன், நன்றாக வீடியோ எடுத்து கொள் என கிண்டல் செய்வது போல் செய்கை காட்டியுள்ளார். அந்த வீடியோ எஸ்.பி கவனத்துக்கு செல்ல உடனே இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றினார். அத்துடன் வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டருக்கு இருவர் குறித்தும் விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் இருவரது செல்போன் கால் ஹிஸ்டிரியை ஆய்வு செய்துள்ளார். அதில் இருவரும் பா.ஜ.க-வில் சேர்வதற்கு மிஸ்டு கால் கொடுத்ததுடன் அதற்கான ஓடிபி நம்பர் வந்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி கவனத்துக்கு செல்ல அவர் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com