அயோத்தியில் கட்டுப்பட்டு வரும் ராமர் கோயில், லோக் சபா தேர்தலுக்கு முன்பாகவே திறப்பு விழாவுக்குத் தயாராகிவரும் சூழலில், ராம ஜென்மபூமி போல சிந்து நிலப்பரப்பையும் (பாகிஸ்தான் மாகாணம்) மீட்டெடுக்க முடியும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். முன்னதாக, லக்னோவில் இந்திய சிந்து சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள்கள் தேசிய சிந்து மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் ஆற்றிய உரையை, மாநில அரசு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில் யோகி ஆதித்யநாத், “500 ஆண்டுகளுக்குப் பிறகு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவிட்டது. 500 வருடங்கள் கழித்து நம்மால் ராம ஜென்மபூமியைத் திரும்பப் பெறமுடியும் என்றால், சிந்து நிலப்பரப்பையும் நம்மால் மீட்டெடுக்க முடியும்.
நன்றி
Publisher: www.vikatan.com