இருப்பினும் தேர்தலில் மட்டும் கவனம் செலுத்திவந்த காங்கிரஸ், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று (டிசம்பர் 3) காங்கிரஸ், டிசம்பர் 6-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தும் வகையில், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உ.பி முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பல்வேறு காரணங்களால், டிசம்பர் 6-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது எனத் தெரிவித்தனர்.


இதனால், ஆலோசனைக் கூட்டத்தை காங்கிரஸும் ஒத்திவைத்தது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூற்றுப்படி, டிசம்பர் 17-ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், `இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன்’ என்று கூறியதாகப் பரவிய தகவல் வதந்தி என நிதிஷ் குமார் விளக்கமளித்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com