பதிலுக்கு “சத்தீஸ்கர் வந்த பிரதமர் மோடி என்மீது தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இருக்கிறார். நான் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால், பிரதமர் மோடி முதல்வராக இருந்தபோது மேற்கொண்ட சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி வகுப்பில் சேர்ந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை நீங்கள் ஏன் நடத்தவில்லை? எதற்காக அஞ்சுகிறீர்கள்?. மிகப் பெரிய பொய்யர் குறித்து நீங்கள் தேடினால், பிரதமர் மோடியின் முகம்தான் வரும்” என வெடித்திருக்கிறார், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல். சத்தீஸ்கரில் மோடியின் நக்சல் குறித்த பேச்சு, தேர்தல் நேரத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையின் ரெய்டு, முதல்வர் மீதே 508 கோடி ரூபாய் லஞ்ச குற்றச்சட்டு என தேர்தல் களம் சூடாகவே இருக்கிறது. எனினும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்கவைப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலுக்கு முந்தைய பெரும்பாலான கருத்துகணிப்பு முடிவுகளும் அதையே தான் சொல்கிறது!
இவ்வாறு இரு கட்சிகளும் தேர்தலில் வெல்ல தீவிரம் காட்டி வரும் நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் அமரும், மோடியின் ‘நக்சல்’ பேச்சு களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது எல்லாம் எதிர்வரும் தேர்தல் முடிவுகள் தெரியப்படுத்தும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com