இதற்கு விளக்கமளித்து பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “தி.மு.க-வில் தற்போதைய தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி அந்த இடத்துக்கு தகுதியுள்ளவராக வளர்ந்துவிட்டதால்தான் எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ.க அரசும் அவரை குறிவைத்து தாக்குகிறார்கள். சென்னை மழையிலும் சரி, தென்மாவட்ட மழை வெள்ளத்திலும் சரி, உதயநிதி மக்களோடு நிற்கிறார். ஆகவே நிலவரத்தை நன்கு புரிந்துகொண்டு நிதி ஆதாரங்களை விரைந்து வழங்க வேண்டுமென பேசுகிறார். மேலும் அவரின் பேச்சு சாமானிய மக்களின் எண்ணோட்டம்தான். `அப்பன் வீட்டு சொத்தா?` என அவரின் பேச்சு.. நாங்க என்ன ஏ.டி.எம்-ஆ என ஒன்றிய அமைச்சரின் ஒருவரின் ஆணவப் பேச்சுக்கான பதிலடிதான். அமைச்சர் உதயநிதியையும் அவரின் துணிவான பேச்சையும் மக்கள் நம்பிக்கையோடு பார்க்கிறார்கள், அவரது பேச்சை தடாலடி எனச் சொல்வதைவிட உரிமைக்குரல் எனலாம்” என்றார்
நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர்கள் சிலர் “மழைவெள்ளத்தால் தி.மு.க-வுக்கு அரசியல் ரீதியாக பேரடி என்பதை அவர்களே மறுக்க மாட்டார்கள். ஆபத்து காலத்தில் அரசு நம் பக்கம் நிற்கவில்லை என மக்களின் வேதனை சென்னையிலும் நெல்லையிலும் உண்டு. இப்பெரும் அதிருப்தியை தடாலடி பதில்களாலும், மத்திய அரசை எதிர்த்து பேசி அதிரடியாக நிதி கேட்பதாலும் மக்கள் கொண்டாடி விடுவார்கள் என நினைக்கிறார்கள். இக்காலகட்டத்தில் உதயநிதியை ஹீரோவாக தி.மு.க காண்பித்து கொண்டாலும் களத்தில் மக்களிடம் கோபம் இருக்கத்தான் செய்கிறது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com